தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) அரசு துறைகளில் காலியான இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகள் எழுத்து தேர்வாகவோ, நேர்காணலாகவோ இருக்கலாம். சில பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வும் நேர்காணலும் நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வு சில நேரங்களில் முதனிலை தேர்வு. முதன்மை தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையமானது தமிழ்நாடு அமைச்சுப் பணியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம்.
தட்டச்சர் (Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு தட்டச்சுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலக தானியங்கமாக்கல்(Computer Automation)சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: 8-ம் நிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படும்.
வயதுத் தகுதி: தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 அன்று படி, 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.சி/எம்.பி.சி பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்.சி/எஸ்.சி.ஏ/எஸ்.டி பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் முறை:
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் பொதுத் தமிழ். இதில் 150 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் பெற வேண்டிய மதிப்பெண்கள் 60.
இரண்டாம் தாள் பொது அறிவு. இதற்கும் 150 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், திறனறிவு பகுதியில் இருந்து 25 வினாக்களும் கேட்கப்படும். தேர்வுக்கான மொத்த கால அளவு 3 மணி நேரமாகும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150. ஏற்கனவே நிரந்தர பதிவு எண் வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்: ரூ. 100. எஸ்.சி/எஸ்.சி.ஏ/எஸ்.டி/ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவீட்டின் படி வைத்திருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கல்வி சான்றிதழ்களை கையில் வைத்திருக்கவும்.
அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளீடு செய்த பின்னர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைத்திருப்பது நல்லது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2024
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/SCE%20Tamil%20Final_.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்